Header Ads



சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு, மிகப்பெரும் பரிசு அறிவிப்பு


கடந்தாண்டு கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோய் விட்டதாகவும் , ஒரு கை இயங்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது . 


இதையடுத்து , ருஷ்டியை தாக்கிய இளைஞருக்கு , 1,000 ச.மீ. , நிலத்தை பரிசாக வழங்குவதாக , ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது . 


 கடந்தாண்டு ஆகஸ்டில் , அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி பங்கேற்றார் . அப்போது , கறுப்பு நிற உடை மற்றும் முகக் கவசம் அணிந்த ஒரு இளைஞர் வேகமாக மேடையில் ஏறி , சல்மான் ருஷ்டியை சரமாரியாக கத்தியால் குத்தினார் . 


ருஷ்டிக்கு , 20 கத்திக்குத்துக்கள் விழுந்தன . அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர் . இந்நிலையில் , தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது உடல் நலம் தேறியிருந்தாலும் , சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் சுத்தமாக பார்வை பறிபோய் விட்டதாகவும் , ஒரு கை செயல் இழந்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது . 


இதையடுத்து , ஈரானில் , ' பாத்வா ' உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் அமைப்பின் செயலர் முகமது இஸ்மாயில் ஐரெயி கூறியதாவது : 


இஸ்லாம் மதம் பற்றி அவதுாறாக சித்தரித்த சல்மான் ருஷ்டிக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது . தற்போது அவர் உயிருடன் இருந்தும் பயன் இல்லை . அவருக்கு தண்டனை விதித்த இளைஞருக்கு , 1,000 ச.மீ. , நிலம் பரிசாக அளிக்கப்படும் . அவர் இல்லாவிட்டால் , அவரது வாரிசுக்கு இந்த நிலம் தரப்படும் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் . சல்மான் ருஷ்டியை தாக்கியவர் , அமெரிக்காவைச் சேர்ந்த ஹாதி மாதர் , 24 , என தெரிய வந்தது . இவர் தற்போது சிறையில் உள்ளார் 

No comments

Powered by Blogger.