Header Ads



ஜனாதிபதி வகிக்கும் மேலதிக 3 பதவிகள் - கலாய்கிறார் சஜித்


நிதியமைச்சின் செயலாளரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும், அரச அச்ச கூட்டுத்தாபன ஆணையாளரும் தற்போதைய ஜனாதிபதியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


இந்நாட்டின் அரசியலமைப்பு, மக்கள் இறையாண்மை, இந்நாட்டின் அதியுயர் சட்டம் என்பவற்றை மீறி ஜனாதிபதி தேர்தல் திகதிகளை அறிவிக்கிறார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


வாரியபொல பிரதேசத்தில் இன்று(21)  இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.