Header Ads



தப்பினார் இம்ரான் கான்


கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாகலாம் தகவல் வெளியான நிலையில் லாகூர் ஐகோர்ட் ஜாமின் வழங்கியது . 


பாகிஸ்தானில் தெஹ்ரீக் இ இன்சாப் , கட்சி தலைவர் இம்ரான் கான் இருந்த போது அவருக்கு எதிராக 24 எம்.பி.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கியதால் , நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததையடுத்து இம்ரான் ஆட்சி கவிழ்ந்தது . பதவி விலகினார் . 


இந்நிலையில் தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10 - க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது.


இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் . இது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மீது வழக்குப்பதியப்பட்டு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாயின . 


ஜாமின் கோரி லாகூர் ஐகோரட்டில் மனு தாக்கல் செய்தார் . இந்நிலையில் இந்த வழக்கில் இன்று லாகூர் கோர்ட்டில் ஆஜரானார் , இம்ரான் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்த்திய நீதிபதி தாரிக் சலீம் ஷேக் இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் 

No comments

Powered by Blogger.