இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் வடக்கு கடற்கரையில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
ஜெயபுரா நகரின் தென்மேற்கில் 10 கிலோ மீட்டர் தூரத்தில்,இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணிக்கு (06:28 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது.
இதன்போது வர்த்தக நிலையமொன்று சரிந்து வீழ்ந்ததாலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அனர்த்த தணிப்பு முகவரகம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment