Header Ads



20 ஆம் திகதி கொழும்பை முற்றுகையிட தயாராகிறது ஐக்கிய மக்கள் சக்தி


அரசாங்கத்தின் ஜனநாயக விரோத வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.


தபால் மூல வாக்களிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திவைத்ததை அடுத்து இன்று காலை இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி பெருந்தொகையான மக்களுடன் கொழும்புக்கு வந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகவும் அதன் பின்னர் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.