Header Ads



ரணில் அரசாங்கம் பதவி விலகுவதற்கான, காலம் தற்போது ஆரம்பமாகியுள்ளது


ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் பதவி விலகுவதற்கான காலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


தேர்தலை ஒத்திவைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து ஆட்சியில் இருக்க முயற்சித்தால் மக்களுடன் இணைந்து தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பிக்கத் தயார் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.


எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், உடனடியாக பதவி விலகுவதே அரசாங்கத்திற்கு எஞ்சியுள்ள ஒரே வழி எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.