Header Ads



7 வருடங்களுக்கு பிரஜா உரிமையை இழக்கப்போகும் மயோன் முஸ்தபா


முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் பிரஜா உரிமையை ஏழு வருடங்களுக்கு இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.


மேலும், அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார்.


2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலுக்கு 42 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

No comments

Powered by Blogger.