Header Ads



2 ஆண்டுகளுக்கு தொடரவுள்ள பொதுஜன பெரமுன ஆட்சி, JVP ஆட்சியமைத்தால் ஜனநாயகம் கேள்வி


உள்ளூராட்சித் தேர்தல் அரச கட்டமைப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே ஆட்சி செய்யும்.


வன்முறையை அடிப்படையாக கொண்டு செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியமைத்தால் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுமென முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.



நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,


உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

No comments

Powered by Blogger.