Header Ads



நாளை சர்வகட்சிக் கூட்டம் - பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு அழைப்பு


பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும், இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார  திஸாநாயக்க ஆகியோர் உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர், 2022 டிசம்பர் 13 ஆம் திகதி  நடத்தப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடு இந்தக் கூட்டத்தில் எட்டப்படவுள்ளது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

25.01.2023

No comments

Powered by Blogger.