Header Ads



நாட்டு மக்களிடம் நாமலின் கோரிக்கை


ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் பேஸ்புக் பக்கத்தில் விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.


“கிரிக்கெட் என்பது இலங்கையர்களாகிய நாம் மிகவும் விரும்பும் ஒரு விளையாட்டு. மறுபுறம், உலகம் முழுவதும் நம் நாட்டிற்கு அன்பையும் மரியாதையையும் கொண்டு வந்த ஒரு விளையாட்டாகும். மேலும், எங்கள் பரபரப்பான வாழ்க்கைக்கு கிரிக்கெட் வெற்றியின் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது மிகப்பெரியது.


ஏற்பட்டுள்ள சில வழக்குகளில் நீதி கிடைக்கும் வரை ஒட்டுமொத்த அணியையும் சங்கடப்படுத்தாமல் நாம் அனைவரும் பொறுமையாகவும் எதிர்பார்ப்புடனும் காத்திருப்பது முக்கியம்.


எதிர்காலத்தில் நாட்டிற்கு வெற்றிகளை பெற்றுத் தர அவர்களை ஊக்குவிப்போம்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 comment:

  1. ஏழு வானம் ஏழு பூமியிலும் புகழ்பெற்ற சட்ட ஆலோசகர் இந்த நாட்டு மக்களின் நலன்கருதி போதனை செய்கின்றார், கேளுங்கள், மக்களே கேளுங்கள். ஒரேயொரு நிபந்தனை, நீங்கள் பொஹொட்டுவ ஆதரவாளராக மட்டும் இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு இது பயன்படாது.

    ReplyDelete

Powered by Blogger.