Header Ads



சிறையில் உள்ள பியுமாலி, தொலைபேசியை பெற்றது எப்படி..?


நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.


விளக்கமறியலில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபா தருவதாக கூறி இந்த கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளதாக தற்போதைய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேற்படி கைதிக்கு இந்த கைத்தொலைபேசி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


தற்போது இந்த கையடக்கத் தொலைபேசி குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் அதன் தரவுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.