Header Ads



நாட்டு நெருக்கடிக்கு யார் தீர்வு காண்பார்கள், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை இது (ஆய்வு முடிவுகள் இதோ)


ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால், நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் நம்புவதாக இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 பேர் தெரிவித்துள்ளனர்.

36.6% பேர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கடியைத் தீர்க்கும் திறன் இருப்பதாக நம்புகிறார்கள்,

அதே நேரத்தில் 29.1% பேர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள்.

23.7% பேர் டலஸ் அழகப்பெருமவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்,

மேலும் 18.3% பேர் பிரதமர் தினேஷ் குணவர்தன பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்.

மேலும் 11.9% பேர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.