Header Ads



இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கண்டனம்


 நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.


இலங்கை அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் தடவையாக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதாக அதில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கடந்த ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு, ஜூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.


அந்த நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது பல தடவைகள் கவலை தெரிவித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மனித உரிமைகள் பேரவையானது அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை சட்டரீதியாக பயன்படுத்துவதை மீறும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் கண்டிக்கிறது.

No comments

Powered by Blogger.