Header Ads



நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில், மருந்துகளுக்கு தட்டுப்பாடு - சத்திரசிகிச்சைகளும் நிறுத்தம்


நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஹரித அலுத்கே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அனைத்து வைத்தியசாலைகளிலிருந்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.