Header Ads



நூற்றுக்கணக்கான ஹாபிழ்களை உருவாக்கிய அல் நஹ்ஜத்துல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபக தலைவர் காலமானார்


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

வாழைச்சேனை முகைதீன் ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவரும்இ அல் நஹ்ஜத்துல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான அல்ஹாஜ் எம்.எல்.ஹச்சி முகம்மட் சிறிது காலம் நோயுற்ற நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.

இவர் பல வருட காலமாக கல்குடா பிரதேச சமூக நலன் விடயங்களில் தனது வாழ்வை அர்ப்பணித்த நல்லுள்ளம் கொண்ட மனிதர் என்பதுடன்இ மார்க்க ரீதியாக கல்குடா பிரதேசத்தில் விழிப்புணர்வையூட்டி நூற்றுக்கணக்கான ஹாபிழ்களை உருவாக்கி மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருமகனாவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை 04ம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மாலை 05 மணிக்கு அல் நஹ்ஜத்துல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு இஷா தொழுகையினை தொடர்ந்து ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


No comments

Powered by Blogger.