Header Ads



தேசிய தவ்ஹீத் ஜமாத், சேவ் தி பேர்ல் உள்ளிட்ட அமைப்புகளின் மீதான தடை தொடர்ந்தும் இருக்கும்

 


உலக தமிழர் பேரவை (GTF) உட்பட ஆறு தமிழ் சர்வதேச அமைப்புகள் மற்றும் 317 தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு மதிப்பாய்வின் ஒரு பகுதியாக தடைப் பட்டியலில் 55 புதிய நபர்களையும் மேலும் மூன்று அமைப்புகளையும் அரசாங்கம் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்னவால் கையொப்பமிட்டு இந்த ஆண்டு ஜூலை 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பான விபரங்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகத் தமிழர் பேரவை (GTF), அவுஸ்திரேலியத் தமிழர் காங்கிரஸ் (ATC), உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC), தமிழ் ஈழ மக்கள் பேரவை (TEPA), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) மற்றும் கனடியத் தமிழர் காங்கிரஸ் (CTC) ஆகியவற்றுக்க்கான தடை நீக்கப்படுள்ளது. 317 நபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தடைப்பட்டியலிலுள்ள அமைப்புகள்

இதில் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் ஒருவராவார். தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தமிழ் மறுவாழ்வு அமைப்பு (TRO), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் சேவ் தி பேர்ல் உள்ளிட்ட 15 அமைப்புகளின் மீதான தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. TW

No comments

Powered by Blogger.