Header Ads



முக்கிய புலி உறுப்பினர் அபுதாபியில் கைது, சிறப்புப் பாதுகாப்புடன் விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வருகை


 தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரும், வெடிமருந்துகள் தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவருமான ஒருவர் அபுதாபியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தினகரன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

இவருக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று அபுதாபிக்கு சென்று விடுதலைப்புலி உறுப்பினரை அபுதாபியிலிருந்து சிறப்புப் பாதுகாப்புடன் விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.

No comments

Powered by Blogger.