Header Ads



சிங்கப்பூரில் கோட்டாபய தங்கியிருந்த ஹோட்டலுக்கு 67 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதா..?


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்தபோது,  ஹோட்டல் கட்டணமாக செலவிடப்பட்ட பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

67 மில்லியன் ரூபா இவ்வாறு ஹோட்டல் கட்டணமாக செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.  

இந்த பணத்தினை அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி செலுத்தியதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல்  வெளியிட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். இதன்போது தங்குமிட கட்டணமாக 67 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. TW


No comments

Powered by Blogger.