Header Ads



நாட்டை வெல்லும் போராட்டத்தின் 2 வது அலை - முக்கிய செயற்பாட்டாளர்கள் இணைவு, புலனாய்வாளர்களை அனுப்பி விசாரணை


அரகலய போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு மேல்மாகாண சிரேஷ்ட  பொலிஸ் அத்தியகட்சர் தேசபந்து தென்னகோன் கொழும்பு மத்திய பிரிவின் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் தலைமையில் நேற்று காலை கொழும்பு 02, வொக்ஷோல் வீதி, இலக்கம் 143 இல் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது “நாட்டை வெல்லும் போராட்டத்தின் இரண்டாவது அலை” என்று அடையாளப்படுத்தப்படுகிறது .


இந்த புதிய அமைப்பிற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக விளம்பரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தென்னகோன் தெரிவித்துள்ளார்.


இந்த புதிய அமைப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி ,மற்றும் முன்னணி கட்சிகளின் கீழ் செயல்படும் சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஆர்வலர்களின் ஆதரவு இருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகள் இணைந்து புதிய அமைப்பை தொடங்கி புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த புதிய அமைப்பின் அமைப்பாளர்களாக போதகர் ஜிவந்த பீரிஸ் மற்றும் கொஸ்வத்தே மகாநாம தேரர் ஆகியோர் செயற்படவுள்ளதாகவும், இணை அமைப்பாளர்களாக ஊடகவியலாளர் கலும் அமரசிங்க, சேனாதி சதுரங்க குருகே மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள சமரசேகர ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.