Header Ads



"இந்தியா தனது படைகளை, இலங்கைக்கு அனுப்பாது"


இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை முற்றிலும் நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதவில் இதனை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் தொடர்புடையவை அல்ல எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.  

No comments

Powered by Blogger.