Header Ads



உறுதியளித்தபடி 13 ஆம் திகதி, நான் பதவி விலகுவேன் - ரணிலுக்கு அறிவித்தார் கோட்டபாய


இதற்கு முன்னர் உறுதியளித்தபடி தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இந்த விடயத்தை பிரதமரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து,  13 ஆம் திகதி தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதனை,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

No comments

Powered by Blogger.