Header Ads



நான் ஜனாதிபதியானால், ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - டலஸ்


தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் நிச்சயமாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போராடும் மக்கள் ரணில் விக்ரமசிங்கவை நிராகரிப்பதாகவும், அப்படிப்பட்ட ஒருவரை பிரதமராக நியமிக்க தான் ஒருபோதும் தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அமைக்கப்படவுள்ள அனைத்து கட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவி எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் டளஸ் அழகப்பெரும கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.