Header Ads



கோத்தாபய மக்களை அநாதையாக்கினார், பெளத்த மதத்­த­லை­வர்­க­ளுக்கு நன்­றி­, இப்­போது புதிய சுதந்­தி­ரத்தை பெற்­றுள்ளோம்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­தா­ரி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்­காக வாக்­கு­று­தி­ய­ளித்தே கோத்­தா­பய ராஜ­பக்ஷ பத­விக்கு வந்தார். ஆனால் வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அவர் பத­விக்கு வந்து மக்­களை அநா­தை­க­ளாக்­கி­விட்டார். பெளத்த மதத்­த­லை­வர்­க­ளுக்கு நாம் நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும். அவர்கள் நாட்­டுக்­காக முன்­நின்­றார்கள். ஏனைய மதத் தலை­வர்­களும் அவர்­க­ளுடன் இணைந்து நாம­னை­வரும் இலங்­கையர் என்ற உணர்­வினை வெளிப்­ப­டுத்­தினோம். இப்­போது நாம் புதிய சுதந்­தி­ர­மொன்றை பெற்­றுக்­கொண்­டுள்ளோம் என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்தார்.

செங்­க­ட­கல பிர­க­டனம் வெளி­யீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் அவ்­வாறு கூறினார். நிகழ்வில் அனைத்து மதத்­த­லை­வர்கள் உட்­பட பெரும்­தி­ர­ளானோர் கலந்து கொண்­டனர்.

அவர் தொடர்ந்தும் உரை­நி­கழ்த்­து­கையில்,

 தற்­போ­தைய பிர­தமர் ஓர் பொம்மை பிர­த­ம­ராகும். நாம் இப்­போது அர­சியல் அமைப்பின் படி எவ்­வாறு செயற்­ப­ட­வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் எமது செயற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுக்க வேண்டும். அர­க­லய (போராட்டம்) காரர்­களை நாம் மிகவும் அன்­புடன் வேண்­டிக்­கொள்­கிறேன். வன்­மு­றை­களில் ஈடு­ப­ட­வேண்டாம். ஜனா­தி­ப­தி­ மா­ளி­கையில் உள்ள சொத்­துக்கள் ஜனா­தி­ப­தி­யி­ன­து­டை­ய­தல்ல. அது மக்­களின் சொத்­துக்கள். இது நாட்டின் சொத்து. நாமனைவரும் ஒன்றிணைந்து எமது நாட்டை செளபாக்கியம் நிறைந்த நாடாக கட்டியெழுப்புவோம். நாங்கள் ஒன்றாக கரம் கோர்ப்போம் என்றார்.

vidivelli


No comments

Powered by Blogger.