Header Ads



ஓமல்பே சோபித தேரரின் முக்கிய கருத்து


ஜனாதிபதி நியமனம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படாவிடின், சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியில் அதனை முன்மொழியத் தயாராக இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 

இன்று -12- இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஓமல்பே சோபித தேரர் இதனை தெரிவித்தார். 

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நாளைய தினம் ஜனாதிபதி பதவி விலகியன் பின்னர் தற்போது மக்கள் வசம் உள்ள ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்ற தேசிய வளங்களை விடுவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

No comments

Powered by Blogger.