Header Ads



ரணில் அனைத்தையும் செய்வார், மக்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள்


இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் என்பதில் தமக்கு பலமான நம்பிக்கை இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் எம்.பி தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டின் மீது ராஜபக்சக்களுக்கு இருக்கும் நெருக்கம் மக்களுக்கு வெளிப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மக்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள் என்றும் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் எம்முடன் நிற்பார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

ராஜபக்சக்கள் இந்த நாட்டில் தேசிய சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தியவர். இன்று அந்த தேசிய பிரதிநிதித்துவமும் தேசிய கருத்தும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நாம் ஏற்படுத்த வேண்டும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” கட்சியின் தலைமையகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேசாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காவியன்

No comments

Powered by Blogger.