இது டாக்டர்களின் வேதனை, அரசாங்கத்திற்கு புரியவில்லை எனவும் குற்றச்சாட்டு (வீடியோ)
- Ismathul Rahuman -
வெள்ளிக்கிழமை மாத்திரம் சுகாதார துறையினருக்கு எரிபொருள் வழங்குவதனால் நேற்று வெள்ளிக்கிழமை அதிகால முதல் டாக்டர்களும், சுகாதாரத்துறையினரும் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர்.
நீர்கொழும்பு, கொப்பரா சந்தி சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்ரோலை பெற்றுக்கொள்ள இவ்வாறு வாகணத்தில் காத்திருக்கின்றனர்.
வைத்தயசாலையில் இருக்கவேண்டிய நாம் இன்று வீதியீல் நிற்கிறோம் என அங்கிருந்த சில வைத்தியர்கள் தெரிவித்தனர். நோயாளிகள் பாவம் கிளினிக் கூட நடைபெறாதநிலை உள்ளன. தொழிலுக்குச் செல்லமுடியாமல் சுகாதாரத்துறையினரும் வரிசையில் காத்திருக்கிறோம். நாட்டில் பெற்ரோல் தீர்ந்த பின்பே எரிபொருள் தேடிச் செல்கின்றனர். ஆட்சியாளர்களுக்கு இது புரிவதில்லை என்றனர்.
Post a Comment