Header Ads



ரணில் முதலைத் தோலை உடையவர் என்பதாலே, மக்களுடைய வலியை உணர்கிறார் இல்லை - அநுரகுமார பதிலடி


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியில் இருந்து விலகி, நான் பிரதமராவதற்கு வழி கொடுப்பேன் என்று பகிரங்கமாக எனக்கு சவால் விடுகின்றார், ஆனால் உண்மையில் அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை, அவர் மக்களின் வலியை உணரவும் இல்லை. அவர் முதலைத் தோலை உடையவர் என்பதாலேயே அவரால் வலியை உணர முடியவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இன்று (05) பாராளுமன்றத்தில் விடுத்த சவாலுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அவர் (ரணில்) எனக்கு சவால் விடுகிறார், ஆனால் உண்மையில், என்னை பிரதமராக நியமிக்க அவருக்கு அதிகாரம் இல்லை. அவரும் ஒரே தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்தவர். தன் பதவியை நிலைநிறுத்தக் கூட அவருக்கு அதிகாரம் இல்லை, எனவே இது எல்லாம் வெற்றுப் பேச்சு. மக்கள் இன்னும் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? எரிபொருள் வரிசையில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? இன்னும் எத்தனை பேர் பட்டினியால் சாக வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளா

No comments

Powered by Blogger.