Header Ads



கர்ப்பிணிப் பெண்கள் ஒரு கலன், எரிபொருளை வைத்திருக்குமாறு கோரிக்கை


கர்ப்பிணி பெண்கள் தாம் கர்ப்பம் தரித்து ஏழு மாதங்கள் ஆகும் போது தயாரிக்க வேண்டிய ஆடைகளுடன் மேலதிகமாக ஒரு கலன் எரிபொருளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை பெண் ஊழியர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறுக்காக வைத்தியசாலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமை இதற்கான காரணம் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

ஒரு கலனில் எரிபொருளை வைத்திருப்பதன் மூலம் எந்த வாகனத்திலாவது கர்ப்பிணி பெண் வைத்தியசாலைக்கு செல்ல முடியும் என சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

மகப்பேறு வைத்தியசாலையில் நடக்க வேண்டும் என்பது கட்டாயமானது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். IB

No comments

Powered by Blogger.