Header Ads



பொலிஸ் ஊரடங்கு என்பது சட்டத்தில் இல்லை, பொலிஸார் கூறியது சட்டவிரோத அறிவிப்பு என்கிறார் சுமந்திரன்


பொலிஸ் ஊரடங்கு எனும் முறைமை சட்டத்தில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாளைய தினம் (9) ஒன்றுகூடவுள்ள மக்களை தடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தமது  சமூக வலைத்தள பக்கத்தில் இட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை நடைபெற இருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டவிரோத அறிவிப்பு என  நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.