Header Ads



கோட்டாபய இலங்கையிலே இருந்திருந்தால் உயிர் பயத்துடன் ராஜிநாமா செய்திருக்க முடியாது - இனி இலங்கை முன்னோக்கிச்செல்லும்


கோட்டாபய மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் மாலத்தீவின் முன்னாள் அதிபரும் அந்நாட்டில் ஜனநாயக முறையில் முதலாவது ஜனாதிபதி ஆக தேர்வானவருமான மெஹாம்மத் நஷீத் தமது ட்விட்டர் பக்கத்தில் கோட்டாபய தொடர்பாக சில தகவலை பகிர்ந்துள்ளார்.

"கோட்டாபய ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி விட்டார். இனி இலங்கை முன்னோக்கிச்செல்லும் என எதிர்பார்க்கிறேன். இலங்கையிலேயே அவர் இருந்திருந்தால் உயிர் பயத்துடன் இருந்து கொண்டு அவரால் ராஜிநாமா செய்திருக்க முடியாது. மாலத்தீவு அரசாங்கம் சிந்தித்து எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்," என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.