Header Ads



எல்லா இனங்களையும், மதங்களையும் மதிப்பதே எனது இலக்கு - ஜனாதிபதி வேட்பாளர் டளஸ், சஜித்துடன் இணைந்து அறிவிப்பு (வீடியோ)


எல்லா இனங்களையும், மதங்களையும் மதிப்பதே எனது இலக்கு என ஜனாதிபதி வேட்பாளர் டளஸ் அழகப்பெரும அறிவித்துள்ளதுடன், இதனை மாத்தறை மாவட்ட மக்கள் நன்கறிவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஆரம்பமாகியது ஒரு ஒருமித்த பயணத்தின் தொடங்கமாகும் எனவும்,பாராளுமன்னத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் போராட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்த வன்னம் பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கும், நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அர்ப்பணிப்புடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,இந்நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஒரே நோக்கம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இடைக்கால ஜனாதிபதி வேட்பாளராக முன் மொழியப்பட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கலந்து கொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.