Header Ads



பெற்றோல் திருடும் போது தீப்பிடித்த மோட்டார் சைக்கிள் - நடந்தது என்ன தெரியுமா..?


இரவு நேரத்தில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த பெற்றோலை திருடிய ஒருவர், வெளிச்சத்தை ஏற்படுத்த சிகரெட் லைட்டரை பயன்படுத்தியதால் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் தீப்பற்றியபோது, திருட்டில் ஈடுபட்ட நபர் அதனை அணைப்பதற்காக தண்ணீர் என நினைத்து வாளி ஒன்றிலிருந்த தின்னரை மோட்டார் சைக்கிளில் ஊற்றிய போது மோட்டார் சைக்கிள் வேகமாக தீப்பற்றி​யதாக விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – 01 சீனிப்போடியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டின் கூரை மற்றும் கதவு, ஜன்னல்கலும் எரிந்துள்ளன. இவ்வாறு தீப்பற்றிய போது "மோட்டார் சைக்கிள் எரிகிறது எழும்புங்கள்" என்று குரல் ஒன்று கேட்டவுடன் தாம் எழுந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.