Header Ads



4 நாடுகளுக்கான அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்வது இடைநிறுத்தம்


நான்கு நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய, அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

விமான சேவைகள் தடை மற்றும் இடைநிறுத்தம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இதன்படி அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான தபால் பொருட்களை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக, எரிபொருள் வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக நாட்டிற்குள் அஞ்சல் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.