Header Ads



எரிபொருள் நிலையங்களில் காத்திருக்க முடியாது, சுகாதார ஊழியர்கள் ஆவேசம்


- புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -

அரச உத்தியோகஸ்தர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்குவதாக அரசு வாக்குறுதியளித்திருந்த போதும் அது இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி இதனால் தாங்கள் தொடர்ந்து அத்தியவசிய சேவைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனையடுத்து  தாங்கள் முழுமையான பணிபகிஷ்ரிப்பில் இன்று -24- ஈடுபட்டுள்ளதாக புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ தாதிகள் மற்றும் சுகாதார துறையாளர்கள் அறிவித்தனர்.

இன்று புத்தளம் தள வைத்தியசாலையில் ஒன்று கூடிய ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்ததுடன்.பெற்றோல் நிரப்பும் நிலையங்களில் சாதாரண பொது மக்கள் நாள் கணக்கில் காத்துநிற்கின்றதை போன்று தாங்களும் இவ்வாறு நின்றால் நோயாளிகளின் நிலை தொடர்பில் சகல தரப்பும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோறிக்கைவிடுத்தனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையின் அத்தியவசிய சேவைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் இடம் பெறாது என்றும் இதன் போது அவர்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.