அவுஸ்திரேலியா உடனான போட்டியில் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிர்ப்பு
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது டுவன்ரி 20 போட்டி இன்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது பார்வையாளர்கள் கோட்டா கோ ஹோம் என்னும் கோஷத்தை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பார்வையாளர்கள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராக இவ்வாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
ஜனாதிபதிக்கு எதிராக கோஷம் எழுப்பியமை குறித்த காணொளியொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment