கோட்டாபய - ரணில் அரசாங்கம், மக்களை ஒடுக்குவதற்கு எதிராக போராட்டங்களை நடத்த தீர்மானம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கம் நாட்டின் குடிமக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகிறது. எனவே இத்தரப்புகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த சமகி ஜன பலவேகய தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். .
இதேவேளை, பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுடன் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் சமகி ஜன பலவேகயவின் உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். thinakkural
Post a Comment