அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது, விநோதமான தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக உடன் பதவி விலகுங்கள்
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை மீண்டும் நிரூபிப்பதாக கட்சியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலையிலும், மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையிலும், ஏனைய அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விநோதமான தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment