நிதி அமைச்சுப் பதவி, மீண்டும் அலி சப்ரியின் வசமாகுமா..?
மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் செய்தி வெளியாகியுள்ளன. மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும், நிதியமைச்சர் பதவியை மீளப் பொறுப்பேற்க முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரியிடம் ஜனாதிபதி கருத்துக் கேட்டுள்ளதாகவும், அதற்கு சப்ரி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காவியன்
Post a Comment