Header Ads



ஜூலை 22 வரையிலும் பெட்ரோலும், ஜூலை 11 திகதி வரை டீசலும் இல்லை - ரணிலின் சகா அறிவிப்பு இல்லை


ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையிலும் பெட்ரோல் இல்லையென்றும், ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் நான்கு வாரங்களுக்குத் தேவையான ஒரு இலட்சம் மெட்ரிக் ​தொன் சமையல் எரிவாயு, ஜூலை மாதத்தில் வரவேண்டும் என்றார்.

டீசலை இறக்குமதிச்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 2வது வாரத்தில் டீசல் கிடைக்கும்  எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் ஏற்றுமதி தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

No comments

Powered by Blogger.