Header Ads



17 க்குப் பின் எரிபொருள் கப்பல் வராதா..? 5 நாட்களாக உள்ள எரிவாயு கப்பலுக்கு செலுத்த 10 மில்லியன் டொலர் கூட எம்மிடம் இல்லை


எதிர்வரும் 17 ஆம் திகதியே இலங்கைக்கான இறுதி எரிபொருள் கப்பல் அனுப்பிவைக்கப்படும் எனவும்,  அதற்கு பின்னர் எந்தவொரு எரிபொருள் கப்பலும் இலங்கைக்கு வருமா என தமக்கு தெரியாது , அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் தூதரகத்துக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் தன்னிடம்  தெரிவித்ததாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

அதேபோல் எரிவாயு கப்பல் ஒன்றும் கடந்த ஐந்து நாட்களாக இலங்கை கடல் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கப்பலுக்கு செலுத்த 10 மில்லியன் டொலர் எம்மிடம் இல்லை எனவும் தெரிவித்த அவர், இவ்வாறான நிலைமையில் அடுத்த மாதம் எமக்கு மிகப்பெரிய நெருக்கடி நிலையொன்று உருவாக்கப்போகின்றது என்றார்.

No comments

Powered by Blogger.