சவூதி அரேபியாவின் மனதை வெல்ல, பிரதமர் ரணிலுக்கு ஒரு ஐடியா
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் காலத்திலிருந்து இலங்கைக்கும் அரபு நாடுகளுக்கும் நல்லுறவு இருந்தது.
சவூதி போன்ற முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு பல உதவிகளை செய்துள்ளன.
கிண்ணியா பெரும் பாலம், பல்கலைக்கழகங்களுக்கான நிதியுதவி என் பலதை செய்துள்ளன.
ஆனால் கடந்த சில வருடங்களாக இலங்கை முஸ்லிம்கள் மீது இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை வழங்ஜ சம்பிக்க ரணவக்கவினால் போடப்பட்ட வழக்கு காரணமாக தடைப்பட்டமை போன்ற காரணங்களால் சவூதி போன்ற முஸ்லிம் நாடுகள் நம் நாட்டை கைவிட்ட நிலையை காண்கிறோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் நாடுகளுடன் நட்புறவு கொண்டிருந்தார். ஆனாலும் அவரது ஆட்சியில் இருந்த சில இனவாத அமைச்சர்களை அவரும் கட்டுப்படுத்த தவறியதாலும் அவரும் சுனாமி வீட்டை கையளிக்க முன் வராத்தாலும் சவூதி போன்ற நாடுகள் அவர் மீதான நம்பிக்கையை இழந்தன.
மேற்படி வீடுகளை விடுவித்து தரும்படி நாம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போது பல கடிதங்கள் எழுதியுள்ளோம். அவற்றில் சிலதுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் வந்ததே தவிர எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில் மீண்டும் பிரதமராக உள்ள ரணில் விக்ரமசிங்க சவூதியால் வழங்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை முஸ்லிம்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்த அரசாங்கம் இனவாதமற்ற அரசாங்கம் என்ற நற்பெயரை சவூதியிடம் பெற முயற்சிக்குமாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.
Ranilukku muslim naadukal endaalay alergi athukkulla ivaru vaera? kanthasaamy....
ReplyDelete