Header Ads



வன்முறைகள் தொடர்பில் பொலிஸாரிடம், எந்நேரத்திலும் வாக்குமூலம் வழங்க தயார் - மகிந்த



அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அவரிடம் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. Why the police is so reluctant to arrest the direct perpetrator of the crime?

    ReplyDelete

Powered by Blogger.