Header Ads



சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளை புனரமைக்க அரச நிதியா..? அமைச்சர் பிரசன்னவுக்கு எதிராக அவரது சகோதரர் எதிர்ப்பு


கடந்த வாரம் ,இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களில் சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளை புனரமைக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அரச நிதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவரது இளைய சகோதரர் சஞ்சீவ ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் இந்த செய்தியை வெளியிட்டுள்ள அவர், வன்முறைகள் தனது சகோதரர் மற்றும் ஏனையவர்களாலேயே தூண்டப்பட்டதாகக் கூறியுள்ளார்

அரசியல்வாதி அண்ணனின்  தவறை தடுங்கள்! வலியுறுத்தும் தம்பியான முன்னாள் கிரிக்கட் வீரர்!

இந்தநிலையில் அரசியல்வாதிகள் தமது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு காப்புறுதி மூலம் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சஞ்சீவ ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.