Header Ads



"பிரதமரின் பதவி விலகல் ஒரு நாடகம், எல்லோரும் கூறுவதைப் போல் கோட்டவும் வீட்டுக்குப் போக வேண்டும்"


- ரஞ்சித் ராஜபக்ஷ -

“முழு நாடும் ஒரே குரலில் பிரதமரும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்றும் இவர்கள் பதவி விலகினால் மாத்திரமே நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் தெரிவிக்கின்றார்கள். தற்போது பிரதமர் பதவி விலகப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது மாத்திரம் போதாது. எல்லோரும் கூறுவதைப் போல் கோட்டவும் வீட்டுக்குப் போக வேண்டும்“ என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்

அவசரகால நிலையைப் பயன்படுத்தி, மக்களை ஒடுக்குவதே பிரதமரின் பதவி விலகல் நாடகத்துக்குள் இருப்பதாக தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத், ஆனால் “மக்கள் அதற்க பயப்படமாட்டார்கள். ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதே மக்கள் வீதிக்கு இறங்கினர். எனவே மக்கள் உணர்ச்சிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது“ என்றும் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.