Header Ads



எரிவாயுக்காக காத்திருக்கும் தாய்மார் - சர்வதேச அன்னையர் தினத்தில் கொழும்பு வீதிகளில் அவலம்


சர்வதேச அன்னையர் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் திகதி ஆகும்.

எனினும் தமது வீடுகளுக்கு சமையல் எரிவாயு பெறுவதற்காக கொழும்பில் பல தாய்மார் மணித்தியாலங்கள் இன்று இரவு இரவாக காத்திருந்துள்ளனர்.

கொழும்பில் நடுவீதிகளில் எரிவாயு பெற மக்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் பலருடைய கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தள்ளன.

ஆமர் வீதியில் 100 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாயமான சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து லொறியிலிருந்த 100 சிலிண்டர்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.