Header Ads



இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் - நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாத திகதி குறித்து தீர்மானம்


பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று திங்கட்கிழமை, 9 ஆம் திகதி நடைபெற உள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று, கட்சித் தலைமைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி குறித்து தீர்மானிக்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டமம் இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

மேலும் நாட்டில் தற்போதைய விவகாரங்கள், பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகர் அறைக்குள் சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் ஆராயப்படவுள்ளமை கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.