Header Ads



மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படுகிறது - லிட்ரோ


தற்போது தொழிற்சாலைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படுகிறது, எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிதாக எரிவாயு கப்பல்கள் வரும்வரை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது எனவும்  லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிவாயு இறக்குமதிக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கட்டணமாக செலுத்தி உள்ளோம்.

இன்னும் 5 அல்லது 6 நாட்களில் இரண்டு எரிவாயு கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.