Header Ads



மஹிந்த இராஜினாமா செய்யக்கூடாதென தற்போது, அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம்


இன்று திங்கட்கிழமை 9 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பதவி விலகலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்  பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யக்கூடாதென வலியுறுத்தி, அலரிமாளிக்கைக்கு முன்பாக தற்போது மஹிந்தவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு பாராளுமன்றமும் பதவி விலக வேண்டும் என சமூகத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக இது மேலும் தீவிரமடைந்துள்ளதுடன் இதற்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வீதிகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பௌத்த பீடங்கள் இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறும் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.