Header Ads



சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை, பின்வாங்கப் போவதில்லை - ஆமர் வீதியில் பதற்றம், எரிவாயு கோரி மக்கள் போராட்டம்


கொழும்பு - ஆமர் வீதி சந்தியில் எரிவாயு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நடுச்சந்தியில் கூடாரம் அமைத்துள்ளனர்.

இதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட போதும், மக்கள் தொடர்ச்சியாக வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பற்ற நிலை ஏற்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு - ஆமர் வீதி பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் பொலிஸார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது பொலிஸார், போராட்டக்காரர்களை வீதி ஓரத்தில் சென்று போராட்டத்தை முன்னெடுக்குமாறு தெரிவித்த போதும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அதற்கு உடன்படவில்லை.

உங்களால் என்ன முடியுமோ செய்யுங்கள் என தெரிவித்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் தமது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் வீதியின் சந்தியில் கூடாரம் அமைத்து வருவதுடன், சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை பின்வாங்கப் போவதில்லை என ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 


No comments

Powered by Blogger.