Header Ads



முற்றாக முடங்கிய நீர்கொழும்பு - கறுப்புக் கொடிகளும் பறந்தன


- Ismathul Rahuman -

நீர்கொழும்பும் நேற்று 6ம் திகதி முற்றாக முடங்கப்பட்டன. ௧டைகள் அனைத்தும் மூடப்பட்டு கறுப்புக் கொடி கட்டப்பட்டிருந்தன. கடை ஊழியர்கள் நகர மத்தியில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கருகே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   அரசு அலுவலகங்கள் செயலிழந்து காணப்பட்டன. வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. மீன் சந்தைகள் மரக்கறிகடைகளும் மூடியுள்ளன.

    நீர்கொழும்பு தெல்வத்தசந்தியில் அமைக்கப்பட்டுள்ள கோ ஹோம் கோட்டா கிளையில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்றன. காலையில் ஆசிரியர்,அதிபர் தொழிற்சங்கள் இவ்வித்திற்கு வருகை தந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 

No comments

Powered by Blogger.